பூந்தமல்லி: ராமாபுரத்தில் மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. போரூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதே பகுதியில் மல்டி மீட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் கம்பெனியை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் கம்பெனியில் இருந்து திடீரென கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.