ஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் ரூ15 லட்சம் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

சென்னை: மயிலாப்பூர் டாக்டர் ரங்கா தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி கமலக்கண்ணன். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சகோதரி. இவரது வீட்டில் தேனாம்பேட்டை லட்சுமி நகரை சேர்ந்த சுதா (28) என்பவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். இவர், வேலையில் சேர்ந்த சில நாளிலேயே வீட்டில் உள்ள வைர, தங்க நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி அவற்றை தனது கணவர் அன்பு என்பவரிடம் கொடுத்து அடகு வைத்து ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் அவரை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பீரோவில் இருந்த நகை மாயமானது. இதுபற்றி வேலைக்கார பெண்ணிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரூ15 லட்சம் மதிப்பிலான வைர நகை, தங்கம், பணத்தை போன்றவற்றை கொஞ்சமாக கொஞ்சமாக அபேஸ் செய்து, சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரிந்தது.

மற்றொரு சம்பவம்: சேத்துப்பட்டு தனமால் தெருவை சேர்ந்தவர் ஜெயசிம்மவர்மன் (54). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர். இவரது மனைவி ரேணுகா. தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 10ம் தேதி இவர்களது வீட்டு பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை மாயமானது. புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது  ஜெயசிம்மவர்மன் மகனின் தோழி திரிசூலத்தை சேர்ந்த ரோஜா (24) நகைகள் திருடியது தெரிந்தது. எனவே அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: