ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொக்கியால் குத்திய லோடுமேன் கைது

திருச்சி, ஜூன் 13: திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் சையது முஸ்தபா மகன் பெரோஸ்கான்(28). இவரது நண்பர் அதே பகுதி பவளநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28). இருவரும் லோடுமேன்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரும் நண்பர் மாலிக் என்பவருடன் சேர்ந்து அரியமங்கலம் ரயில்வே பாலத்திற்கு அடியில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் பெரோஸ்கானுக்கும் வெங்கடேஷ்க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் மூட்டை தூக்கும் கொக்கியால் பெரோஸ்கானை வெங்கடேஷ் குத்தினார். இதில் காயமடைந்த பெரோஸ்கான் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரியமங்கலம் போலீசார் வெங்கடேஷ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மாலிக்கை ேதடி வருகின்றனர்.

Related Stories: