திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 13: தஞ்சை மாவட்டம் தோகூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தணிக்கைத்துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. கலெக்டர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். தஞ்சை ஆர்டிஓ சுரேஷ் வரவேற்றார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 280 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 80 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. 200 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.முகாமில் ரூ.4,67,750 மதிப்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கும், விலையில்லா வீட்டுமனைப்பட்டா 12 பேருக்கும், பட்டா மாற்றம் 56 பேருக்கும், சான்றிதழ் 2 பேருக்கும் வழங்கப்பட்டன. பின்னர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சிறு வணிகம் செய்ய வங்கி கடன் பெற கலெக்டர் பரிந்துரை செய்தார்.