கும்பகோணம், ஜூன் 13: கும்பகோணம் அருகே ஜனசதாப்தி ரயில் பெட்டியில் புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு ஜனசதாப்தி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம்போல் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயில் ஆடுதுறை வழியாக கும்பகோணம் நோக்கி சென்றது.ஆடுதுறை ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது ரயில் பெட்டி பகுதியிலிருந்து புகை மளமளவென வெளியேறியது. இதையறிந்து உடனடியாக சிவப்பு சிக்னல் போடப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது.இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புகை வருவதை பார்த்து ரயிலை விட்டு பயணிகள் கீழே இறங்கி ஓடினர்.