சேரன்மகாதேவியில் இளம்பெண் தற்கொலை

வீரவநல்லூர், ஜூன் 13:  சேரன்மகாதேவியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சேரன்மகாதேவி தேசபந்துதெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுந்தரி (24). நெல்லையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்த இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு ம மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: