உளுந்தூர்பேட்டை, ஜூன் 12: உளுந்தூர்பேட்டை அருகே வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி (15 பெயர் மாற்றப்பட்டுள்ளது). சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாரதியை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே மாவிலிங்கம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் மணி என்பவர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் சுந்தரியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்.