பெட்டிக் கடையில் தகராறு: 3 பேர் அதிரடி கைது

திருக்கோவிலூர், ஜூன் 11:  திருக்கோவிலூர் அருகே கொட்டாமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (39). இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (24) மற்றும் அவரது நண்பர்கள் சிகரெட் வாங்கிக் கொண்டு 100 ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளனர். அப்போது ஏழுமலைக்கும் ஆனந்தராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை தரப்பினர் ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசில் ஆனந்தராஜ் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஏழுமலை (39), வேலு (47), சிவக்குமார் (36), விஜய் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஏழுமலை, வேலு, சிவக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: