விழுப்புரம் நீதிமன்றத்தில் 48 காலி பணியிடம்

விழுப்புரம், ஜூன் 11:  விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு அடிப்படையிலான காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மாவட்ட நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. 29 இரவுக்காவலர், 11 மசால்சி, 7 பெருக்குபவர், 1 துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் அடிப்படை கல்வித்தகுதி, வயதுவரம்பு, இனசுழற்சி விவரம், விண்ணப்பப்படிவம், தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு மற்றும் அனைத்து தகவல் பரிமாற்றங்கள் இணையதளத்தில் வெளியிடப்

படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

Related Stories: