×

நாகர்கோவிலில் வாலிபர் கொலை கஞ்சா விற்பனை மோதலில் நடந்ததா?

நாகர்கோவில், மே 25 : நாகர்கோவிலில் வாலிபர் கொலையில் கஞ்சா விற்பனை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.நாகர்கோவில் கோட்டார் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (28). இவர் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், நாகர்கோவில் வடசேரி பாலமோர் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட  சித்ரா இந்து மத நூல் நிலைய கலையரங்கம் வராண்டாவில் முகத்தில் காயங்களுடன் சிவக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது அருகில் கருங்கல் தொலையாவட்டத்தை சேர்ந்த ஜாண் (48) என்பவர் படுகாயங்களுடன் கிடந்தார்.வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயங்களுடன் கிடந்த ஜாணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கும்பலாக சேர்ந்து சிவக்குமாரை தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை.

மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்குமா? அல்லது பணம் பங்கீடு விவகாரம் உள்ளிட்ட வேறு பிரச்சினைகளில் கொலை செய்து இருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஜாணிடம் நடந்த விசாரணையில்  நாங்கள் 4, 5 பேர் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் மாறி, மாறி தாக்கினார்கள். இதில் சிவக்குமாரை தாக்கி கொலை செய்தது யார்? என்பது எனக்கு தெரியாது என கூறி இருப்பதாக தெரிகிறது. ஜாண் கூறுவது உண்மை தானா? என போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி இருந்ததால் இது தொடர்பாக நேற்று தான் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் சந்தேகப்படும் படி 3 வாலிபர்கள் பெயர் விவரம் கிடைத்துள்ளது. இவர்கள் கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags : murder ,Ganja ,Nagercoil ,
× RELATED 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு ஆந்திர...