திருச்சி, மே 25: தமிழ்நாடு ஆட்டோமொபைல்ஸ் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் கடந்த 1988 முதல் தமிழகத்தில் ஆட்டோமொபைல்ஸ்சில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வணிகர்கள் வாகனங்கள் பழுது நீக்குவோர் மற்றும் வாகன உபயோகிப்போரும் அறிந்துகொள்ளும் வகையில் வருடத்திற்கு ஒருமுறை ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. 2 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சிகளை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் 2006, 2010, 2015 ஆகிய ஆண்டுகள் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் மீண்டும் கண்காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை சென்னை டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவன இணை செயல் இயக்குநர் தினேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மிண்டா ஆட்டோமோடிவ் சொல்யூசன்ஸ் நிறுவன தலைவர் சிவா.அரவிந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சியில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில் ஆட்ேடா ெமாபைல்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.