×

மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் கொள்ளை துறையூரில் மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி, மே 25:   துறையூர் தங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமார், டூவீலர் மெக்கானிக்க. இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைந்து நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், 27 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை காலையில் பார்த்த அக்கம்பக்கத்தினர் பாலகுமாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து ஊருக்கு வந்த பாலகுமார் பூட்டு உடைக்கப்பட்டிருந்த தன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 14 பவுன்  நகைகள் மற்றும் 27 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பாலகுமார் துறையூர் போலீசுக்கு புகாரி அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.  இதே பகுதியில் கடந்த 15ம் தேதி துரைமைக்கேல் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்கம் திருடு போன சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் துறையூர் தங்கநகர் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : robberies ,
× RELATED அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை