×

இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை

சாத்தூர், மே 25: சாத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியானார். சாத்தூர் அருகே சிவணனைந்தபுரம் விலக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சுமார் 55 வயது மதிக்கதக்க முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சிகிச்சைக்காகவும், முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஆனால் இறந்த முதியவர் யார் என்று தெரியாமல் சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

Tags : wheeler ,Police investigation ,
× RELATED திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது