×

திருட்டு வழக்கில் கைதான வாலிபரிடம் 16 பவுன் நகை பறிமுதல்

திருவாரூர், மே 25: கீழ்வேளூர் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட திருவாரூரை சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 16 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.கீழ்வேளூர், வேளாங்கண்ணி  காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆழியூர், கருவேலங்கடை, மாதாகோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இந்த இடங்களில் கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்  நாகை எஸ்.பி. விஜயகுமார்  உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நாகை ஏ.எஸ்.பி. பத்ரிநாதன் தலைமையில் போலீஸ்சார் தீவிர விசாரனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது திருவாரூர் மாவட்டம் கூடுர் தெற்கு தெருவை சேர்ந்த  மகாலிங்கம் மகன் கும்கி (எ) கணேசமூர்த்தி (25) என்பவர் கீழ்வேளூர், வேளாங்கண்ணி பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கணேசமூர்த்தியை கைது செய்த போலீஸ்சார் அவரிடம் இருந்து 16 பவுன் நகைகளையும் கைப்பற்றினர்.


Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...