திருத்துறைப்பூண்டி, மே 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு எல்லை நாகலடி வளைவில் நாகை மாவட்டம் குரவப்புலத்திலிருந்து கார் திருத்துறைப்பூண்டி வந்த போது வளைவு என்பதால் மெதுவாக வந்தது. அப்போது திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் சென்று அரசு பேருந்தும் அதே வளைவில் மெதுவாக சென்றது. அப்போது தென்பாதியிலிருந்து திருத்துறைப்பூண்டி வந்த டிராக்டர் காரின் பின்னால் மோதியது. மோதிய போது கார் எதிரே மெதுவாக வந்த அரசு பேருந்து முன்பக்கம் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் கிடையாது. கார் மட்டும் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இருபுறமும் சேதம் அடைந்தது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை செய்து விபத்து ஏற்படுத்திய டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.