×

2019 தேர்தல் நிலவரம் விருதுநகர் தொகுதி மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

சிவகாசி, மே 25: திருவிழாவிற்கு வந்த இடத்தில் மதுபோதையில் தள்ளாடிய கணவனை மனைவி கண்டித்ததால் கணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி அருகே முருகன் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. குடிப்பழக்கம் உள்ள இவர், தனது மனைவியின் ஊரில் நடந்த திருவிழாவில் மது அருந்தியுள்ளார். இதனை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். ஊருக்கு வந்த பழனிச்சாமி, தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : constituency wife ,Virudhnagar ,suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை