பாபநாசம், மே 25: பாபநாசம் அருகே பொன்மான் மேய்ந்தநல்லூர் பொன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 21ம் தேதி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. 22ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதேபோன்று பாபநாசம் அடுத்த உம்பளாப்பாடி திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.