பாபநாசம், மே 25: திருக்கருக்காவூர் சோழன் தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை பாபநாசம் டிஎஸ்பி நந்தகோபால் துவக்கி வைத்தார்.கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், 200 பேருக்கு பரிசோதனை செய்தனர். இதில் கண்புரை முற்றிய நிலையில் இருந்த 40 பேரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.