திருவையாறு, மே 25: திருவையாறு அருகே பட்டப்பகலில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அமம்மன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுகுமார் (26). இவர் நேற்று காலை 11 மணியளவில் திருவையாறில் இருந்து அம்மன்பேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அரசூர் அருகே இருசக்கர வாகனத்தை மறித்து சுகுமாரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.