×

மக்களின் கோரிக்கைகளை வாதாடி பெற்று தருவேன்

புதுக்கோட்டை, மே25: மக்களின் கோரிக்கைகளை வாதாடி பெற்று தருவேன் என  திருநாவுக்கரசர் கூறினார்.திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற  திருநாவுக்கரசர் வெற்றி பெற்று முதன் முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு புதுக்கோட்டை நகர எல்லையான திருக்கோகர்ணம் அருகில் மேளதாளங்களுடன் வெடி வெடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் புதுக்கோட்டை கலெக்டர்  அலுவலகம் வாயிலில் அமைந்துள்ள புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் உருவ சிலைக்கு மற்றும் சத்தியமூர்த்தி, அம்பேத்கர், எம்ஜிஆர், அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த ரங்கம் தொகுதியில் கூட இம்முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு எனக்கு கிடைத்துள்ளது. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி,வாதாடி மக்களுக்கு பெற்றுத் தருவேன்  என்றார்.பின்னர்  வாக்காளர்களுக்கு திறந்த வேனில் நின்றபடி கைகூப்பி நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றார்.


Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா