×

உடையார்பாளையம் பேரூராட்சியில் 3 ஆண்டாக சீரமைக்கப்படாத கடைவீதி சாலை

ஜெயங்கொண்டம், மே 25:  உடையார்பாளையம் பேரூராட்சியில் கடைவீதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயங்கொண்டம்  அடுத்த உடையார்பாளையம் பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த பேரூராட்சியில் பல சாலைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, நீண்ட நாட்களாக உடையார்பாளையம் நகருக்குள் இருந்து புதிதாக கட்டப்பட்டு செயல் படுத்தப்படாமல்  இருக்கும் திருச்சி-சிதம்பரம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலை புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் அருகே தத்தனூரில் உள்ள  தனியார் பள்ளி கல்லூரிக்கும்  உடையார்பாளையம் வாரச்சந்தைக்கு செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், நுகர்வோர்கள் உள்ளிட்டோர் நடந்தும், சைக்கிளிலும், மினி லாரிகளிலும் சென்று வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே இந்த சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து சைக்கிளில் சென்றால்கூட தவறி கீழே விழும் அளவிற்கு மிக மோசமாக உள்ளது.

 இந்த சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும். இந்த சாலையில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மின்விளக்கு வசதியும் இல்லை  ஏற்கனவே ஒரு முறை...கீழக்கணவாய் கிராமத்தினர் கடந்தாண்டு அப்போதிருந்த ஆலயமணி என்ற வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து குடிநீர் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வட்டார வளர்ச்சித்துறை அலுவலரை சிறை பிடித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bargain Road ,Pararppalayam ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது