×

மக்கள் எதிர்பார்ப்பு செந்துறை பகுதியில் மழை

செந்துறை, மே 25:  செந்துறை பகுதியில் நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.இந்நிலையில் நேற்று செந்துறை பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய துவங்கியது. செந்துறை, பொன்பரப்பி, மருவத்தூர் உள்ளிட்ட பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் செந்துறை பகுதியில் வெப்பம் சற்று குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை காணப்பட்டது. அதேபோல் அரியலூர், கீழப்பழுவூர், விகைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் அப்பகுதி குளிரோட்டமாக காணப்படுகிறது. செந்துறை பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள்,  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...