×

மூணாறு அருகே மார்க்சிஸ்ட்டுகள் மீது காங்கிரஸார் தாக்குதல் தடுத்த போலீசுக்கு மண்டை உடைந்தது

மூணாறு, மே 25:  மூணாறு அருகே  காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதில்  மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். இதனைத் தடுக்க முயன்ற போலீசாருக்கு மண்டை உடைந்தது. இடுக்கி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டீன் குரியகோஸ் வெற்றி பெற்றதையொட்டி வெற்றி ஊர்வலம் மூணாறு அருகே தொக்குப்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகத்திற்கு அவர்கள் செல்ல முயன்றனர். இதனால் இரு கட்சியினருக்கும்மோதல் ஏற்பட்டது. இதில்  மார்க்சிஸ்ட்  கிளை செயலாளர் ஜோபின், ஜெய்சன்,பிஜூ, அணில் காயமடைந்தனர். இதை தடுக்க முயன்ற போலீசார் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் மண்டை உடைந்தது. காயமடைந்தவர்கள் அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Marxists ,attack ,Munnar ,Congress ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை