×

கிணற்றில் கிடந்த கூலித்தொழிலாளி பிணம் மீட்பு

உத்தமபாளையம், மே 25: உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர்  இருதயராஜ்(62). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். இதனிடையே இதே ஊரில் உள்ள தனியார் வாழைத்தோட்ட கிணற்றில் பிணம் ஒன்று கிடப்பதாக உத்தமபாளையம் போலீசார்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்துகிடந்த இருதயராஜ் சடலத்தை கைப்பற்றி, உத்தமபாளையம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இவரது சாவு எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Corpus ,laborer ,well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...