×

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் தார்சாலையின் அவலம் வாகன ஓட்டிகள் அவதி

சீர்காழி, மே 25: சீர்காழி சட்டநாதபுரத்தில் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்ததால் அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் தெற்கு தெருவில் சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு சாலைகள் முழுவதும் ஜல்லி பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்  சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை எது, பள்ளம் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.  சாலைகள் போடும்போதே தரமானதாக போடாததால் ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி ஜல்லி பெயர்ந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனனர்.


Tags : Darsallam ,Pattanathur ,Sirkazhi ,
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்