×

பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மயிலாடுதுறை, மே 25: மயிலாடுதுறை அருகே கடன் வாங்கிய பெண்ணை தகாத உறவுக்கு அழைத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கோடங்குடி பகுதியை சேர்ந்தவர் வனிதா(35) பெயர் மாற்றப்பட்டுள்ளது.  இவர் கோடங்குடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த நாகராஜ மகன் அருண்பாபு என்பவரிடம் வட்டிக்கு ரூ.6000 கடன் வாங்கி முழுமையாக கட்டிவிட்டதாக கூறப்படுகிறது.  இதற்கிடையே வனிதாவை பார்க்கும் நேரங்களில் தகாத உறவுக்கு அழைத்துள்ளார். மறுப்பு தெரிவித்த வனிதா அருண்பாபுவை திட்டியுள்ளார். இதனால் வனி விடுவதாக மிரட்டியுள்ளார்.  மேலும் பலமுறை எச்சரித்தும் தொடர்ச்சியாக தொந்தரவு அளித்ததால் வனிதா தன் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.  மேலும் பெரம்பூர் காவல் நிலையத்தில் வனிதா அளித்த புகாரின்பேரில் போலீசார்  கொலைமிரட்டல், பெண்ணை துன்புறுத்துதல் போன்ற 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து அருண்பாபுவை தேடிவருகின்றனர்.


Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...