×

பளுதூக்கும் வீரர்கள் இலவச விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் 29ம் தேதி கடைசி


நாகை, மே 25: பளுதூக்கும் வீரர்கள் வேலூரில் உள்ள விடுதியில் சேர்ந்து இலவசமாக படிப்பதற்கு வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய பளுதூக்குதல்  முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூரில் செயல்பட்டு வருகிறது.விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும்  வீராங்கனையராக விளங்குவதற்கும் 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு பயில உள்ள பளுதூக்குதல் விளையாட்டில் திறமை மிக்க மாணவ, மாணவியர்கள் தகுதியின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.  விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு   மாணவ, மாணவியர்களுக்கு  மாநில அளவிலான தேர்வு வரும் 30ம் தேதி  காலை 8 மணிக்கு வேலூரில் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

எனவே  விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர்கள்    விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாக  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 29ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.மாநில மற்றும் தேசிய அளவில்  வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள், விருதுகள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Tags : Weightlifting players ,hotel ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!