×

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

செம்பனார்கோவில், மே 25: செம்பனார்கோவிலில் நடந்த அனைத்துதுறை ஓய்வூதியர்கள் சங்க மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதிய சங்க மூன்றாமாண்டு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ராமலிங்கம், வட்ட இணை செயலாளர் நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட கிளை துணைதலைவர் கவிஞர் ராஜாராமன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ஜெகதீசன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய ஓய்வூதிய திட்டததை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்த வேண்டும். செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டும். மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். செம்பனார்கோவில் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநில செயற்குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் பழனிவேலு, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறை நகர தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் கோதண்டபாணி நன்றி கூறினார்.


Tags : Pensioners Union ,
× RELATED ரயில்வே மருத்துவமனையின் சீர்கேடுகளை...