×

ரயில் பாதையில் பொறியியல் பணி 3 நாட்கள் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கரூர், மே 25: ரயில்பாதையில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் 25ம்தேதி (இன்று) 28ம்தேதி, ஜூன்1ம்தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 25ம்தேதி (சனிக்கிழமை) கோவை-நாகர்கோயில் பாசஞ்சர் ஈரோடு-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோயில்-கோவை பாசஞ்சர் திண்டுக்கல்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடுடவுண்& திருச்சி பாசஞ்சர் ஈரோடு-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு-திருநெல்வேலி பாசஞ்சர் ஈரோடு-கரூர் இடையே ரத்து செய்யப்படுவதால் கரூரில் இருந்து வழக்கமான நேரப்படி இயக்கப்படுகிறது.திருச்சி-ஈரோடு பாசஞ்சர், திருநெல்வேலி- ஈரோடு பாசஞ்சர் கரூர்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-பாலக்காடு பாசஞ்சர் திருச்சி-கரூர் இடையே 90நிமிடம் தாமதமாக இயக்கப்படும். 28ம்தேதி (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்படும் ரயில்கள்:ஈரோடு-திருச்சி பாசஞ்சர் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. கோவை-நாகர்கோயில் பாசஞ்சர் ஈரோடு-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோயில்-கோவை ரயில் திண்டுக்கல்-ஈரோடு இடையே ரத்து செய்யப்பட்டு ஈரோட்டில் இருந்து இயக்கப்படும். பாலக்காடு- திருச்சி பாசஞ்சர்ஈரோடு- திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு/திருநெல்வேலி பாசஞசர் ஈரோடு-கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரில் இருந்து புறப்படும். திருச்சி-ஈரோடு பாசஞ்சர் கரூர்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. கரூர்-திருச்சி பாசஞ்சர், திருச்சி-கரூர் பாசஞ்சர் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

 நாகர்கோயில்-மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் கரூரில் 15நிமிடம் நிறுத்தப்படும். திருநெல்வேலி -ஈரோடு பாசஞ்சர் கரூரில் இருந்து 50நிமிடம் தாமதமாக இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு பாசஞசர் திருச்சி-கரூர் இடையே 80நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
ஜூன் 1ம்தேதி (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்படும் ரயில்கள்:கோவை-நாகர்கோயில் பாசஞ்சர் ஈரோடு-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோயில்- கோவை பாசஞ்சர் திண்டுக்கல்- ஈரோடு இடையே ரத்து செய்யப்பட்டு ஈரோட்டில் இருந்து இயக்கப்படும். பாலக்காடு- திருச்சி பாசஞ்சர் ஈரோடு-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.ஈரோடு- திருநெல்வேலி பாசஞ்சர் ஈரோடு-கரூர் இடையே ரத்து செயப்பட்டு  கரூரில் இருந்து இயக்கப்படும். திருச்சி-ஈரோடு பாசஞ்சர், திருநெல்வேலி- ஈரோடு பாசஞ்சர் கரூர்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-பாலக்காடு பாசஞ்சர் திருச்சி-கரூர் இடையே 90நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு