×

பொன்னேரியில் பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

பொன்னேரி, மே 25: மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியை 2வது முறையாக தக்க வைத்துள்ளது. இதனை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாஜவினர் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வெற்றியை கொண்டாடினர். பின்னர் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து பாஜகவினர் ஊர்வலமாக  ஊர்வலமாக வலம் வந்தனர்.

இதில் மாவட்ட தலைவர் பாஸ்கரன்,   மகளிர் அணி மாவட்ட தலைவர் தங்கமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், ஒன்றிய விவசாய அணி தலைவர் அன்பு, மாவட்ட எஸ்சி அணித்தலைவர் வேலன், மாவட்ட பொதுச் செயலாளர் மோகன், மாவட்ட துணைத் தலைவர் இருசப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலாயுதம், ஒன்றிய தலைவர் பொன்பாஸ்கர், பொன்னேரி நகர தலைவர் கோட்டி, மீஞ்சூர் ஒன்றிய பொதுச்செயலாளர் ஓம்சக்தி பாண்டியன்,  நகர தலைவர் பரணி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...