×

மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி

புழல், மே 25: புழல், காவாங்கரை, திருநீலகண்ட நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (45). கொத்தனார். நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள தமிழன் நகரில் உள்ள தியாகராஜன் என்பவர் வீட்டு மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வீட்டின் பக்கவாட்டு சுவரை ஒட்டியுள்ள மின்கம்பியில் சங்கரின் கை பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்