×

தொல் திருமாவளவன் வெற்றி விசிகவினர் கொண்டாட்டம்

திருவள்ளூர், மே 25:  திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட பொதுச்செயலாளர் து.ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர்.
இதையொட்டி திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் திருவள்ளூர் ஆயில் மில் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்தமிழன் வரவேற்றார். நிர்வாகிகள் யோகா, திருவரசு, ஈசன், ராஜா ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில செயலாளர் நீலவானத்து நிலவன், தலைமை நிலைய செயலாளர் அ. பாலசிங்கம், மாநில நிர்வாகிகள் தளபதி சுந்தர், ஜெயப்பிரியா, இளவரசு ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஆனந்த், டில்லி, குட்டி, பிரபு, செந்தில், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி : பொன்னேரி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்  கோபி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வழக்கறிஞர்கள் நெடுஞ்செழியன், அமரகவி, பொன்னேரி தொகுதி செயலாளர் சேகர், மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை வாசன், ஒன்றிய செயலாளர்கள் உமாபதி, வாசு, நகர செயலாளர்கள் மதன், சந்திரசேகர் நிர்வாகிகள் வினோத், மதன், நிர்மல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை பொன்னேரி தொகுதி அமைப்பாளர் அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vellikavar ,celebration ,Thol Thirumavalavan ,
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு