தாம்பரம், மே 25: வாக்கு எண்ணிக்கை நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி மேற்கு தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் மாநகர போக்குவரத்து கழக பணிமனை எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது விற்பனை செய்யப்படுவதாக, தாம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தபோது, பாரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. உடனே போலீசார் அதிரடியாக அங்கு சென்று, மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், செட்டிகுளத்தை சேர்ந்த முனீஸ் (32), ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த சங்கிலிதுரை (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 மதுபாட்டில்கள், ₹5000 பறிமுதல் செய்யப்பட்டன.