×

முதியோர் நலனில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருது: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், மே 25: மாவட்டத்தில் முதியோர் நலனில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு.தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் வயோஸ்ரஸ்தா சம்மன் - 2019 என்ற மாநில விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோர் நலனில் சிறந்து விளங்கும் நிறுவனங்களிடம் இருந்து உரிய கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதி உள்ள நிறுவனங்கள் தங்களின் கருத்துருவுடன் முதியோர் நலனுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆங்கிலத்தில் அறிக்கையாகவும், உரிய புகைப்பட சான்றுகளுடன் மே 31ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், 43, செவிலிமேடு 2வது தெரு, காந்தி நகர் (கலெக்டர் அலுவலகம் எதிரில் ) - 631501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : companies ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...