பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே வரும் 28ம் தேதி மற்றும் ஜூன் 2ம் தேதி இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே இன்று, வரும் 29ம் தேதி மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில்  பிற்பகல் 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். மேலும் திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே இன்று மற்றும் ஜூன் 3ம் தேதி அதிகாலை 3.50, 4 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் 10 நிமிடம்  தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: