திருச்செங்கோடு, மே 25: திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று 50 மூட்டை கொப்பரை ₹1.50 லட்சத்திற்கு ஏலம் போனது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. பட்லூர், இறையமங்கலம், சோழசிராமணி, திருவாண்டிப்பட்டி, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 50 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த கொப்பரையை கொள்முதல் செய்ய வெள்ளக்கோவில், முத்தூர், வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். ரகசிய ஏலம் நடத்தப்பட்டது. இதில் முதல் தர கொப்பரை கிலோ ₹70.35 முதல் ₹ 87.10 வரையும், இரண்டாம் தர கொப்பரை கிலோ ₹50.60 முதல் ₹68.40 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 50 மூட்டை கொப்பரை, ₹1.50 லட்சத்திற்கு விற்பனையானது.