×

பாவை கல்லூரி மாணவர்கள் கல்லூரி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கல்

ராசிபுரம், மே 25: ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை மாணவ, மாணவிகள் இறுதியாண்ைட நிறைவு செய்யும் பொருட்டு, தங்கள் துறை நூலகத்திற்கு ₹35 ஆயிரம் மதிப்பிலான புத்தங்களை பரிசளித்தனர். தொடர்ந்து மூன்றாமாண்டு மாணவர்கள், இறுதியாண்டு மாணவர்களுக்கு நினைவு பரிசாக மரக்கன்றுகளை வழங்கினர்.  

கல்லூரியில் படிப்பை முடித்துச்செல்லும் மாணவர்கள் தங்கள் நினைவாக பயனுள்ள ஒன்றை செய்வதற்காக புத்தகங்களை வழங்கியதை, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர்கள் (சேர்க்கை) செந்தில், (நிர்வாகம்) ராமசாமி, கல்லூரி முதல்வர் பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், கல்வி முதன்மையர் செல்வி, துறைத்தலைவர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : college students ,college library ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...