×

மணல் கடத்திய டிரைவர் கைது

லாரி பறிமுதல்கிருஷ்ணகிரி, மே 25: பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை மத்தூர் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரி டிரைவரிடம் விசாரித்ததில், அவர் பர்கூர் அருகே சப்பாணிப்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் பசுபதி(22) என்பதும், நடுப்பட்டி ஏரியிலிருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மணல் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்