×

இளம்பெண்ணை கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு

தேன்கனிக்கோட்டை, மே 25:  ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(46). இவருடைய 17வயது மகள், கடந்த 19ம்தேதி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற போது, திடீரென காணாமல் போனார்.  பல்வேறு இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில், வேணுகோபால் அளித்த புகாரில், அதே ஊரை சேர்ந்த மாதேஷ் மகன் மதன் என்ற வாலிபர், தனது மகளை கடத்தி சென்றதாகவும், அவரது உறவினர்கள் லட்சுமிகாந்தன், சீனிவாசன், கணேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...