×

தர்மபுரி, அரூரில் அம்பேத்கர் சிலைக்கு வி.சி.கட்சியினர் மாலை

தர்மபுரி, மே 25: நாடாளுமன்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார். அக்கட்சியைச் சேர்ந்த ரவிகுமார், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல், தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, செய்தி தொடர்பாளர் பாண்டியன், முன்னாள் செயலாளர் ராமன், கருப்பண்ணன், ஜெகன், அம்பேத்வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரூர்:அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து கச்சேரி மேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ஜானகிராமன், அரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சாக்கன் சர்மா, தொகுதி துணை செயலாளர் கேசவன், மூவேந்தன், ராமச்சந்திரன், வழக்கறிஞர்கள் ரமேஷ், தவமணி, ராஜசேகர், ரவி, தீத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : VCC ,idol ,Ambedkar ,Dharmapuri ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...