திருப்பூர், மே25:திருப்பூர், லட்சுமி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. திருப்பூர், பி.என் ரோடு மில்லர் ஸ்டாப் அருகில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. அத்துடன், 100க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களும் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரின் காரணமாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.