×

மக்கள் நீதி மய்யத்திற்கு கை கொடுத்த 3 தொகுதிகள்

ஈரோடு, மே 25: மக்கள் நீதி மய்யத்திற்கு ஈரோடு கிழக்கு உள்பட 3 தொகுதிகளில் மட்டும் 33 ஆயிரம் வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஈரோடு மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சரவணக்குமார் போட்டியிட்டார். இக் கட்சி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 47 ஆயிரத்து 574 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளது.

ஈரோடு மக்களவை தொகுதியை பொருத்த வரை ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் இக்கட்சி 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம் ஆகிய 3 தொகுதிகளில் தாராபுரம் தொகுதியில் 3552 வாக்குகளும், மற்ற 2 தொகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியை விட சுமார் 10 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளதால் மய்யம் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...