பொள்ளாச்சி, மே 25: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கத்தாலும் மழைபொழிவு இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. வறட்சியால் கிராமங்களில் உள்ள பல கிணறு, குளம் மற்றும் குட்டைகள் வற்றி தண்ணீரின்றி காணப்பட்டது. குடி நீருக்காக, கிராம மக்கள் பல கிமீ., தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில ஊராட்சிகளில் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை குடிநீர் விநியோகம் இல்லாமல் உள்ளது. பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால், போர்வெல்களில் தண்ணீர் இல்லாமல் போனது.