மகளை கடத்தியதாக தாய் புகார்

அந்தியூர், மே 25:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம் இந்திரா வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (45). இவரது மகள் மீனாட்சி(16). இவர் பிளஸ் 2 முடித்து விட்டு, வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மீனாட்சியை காணவில்லை. இதுகுறித்து  தாய் மகேஸ்வரி, தனது மகளை சாவக்கட்டுபாளையத்தை சேர்ந்த சாலமன் என்பவர் கடத்தி சென்றதாகஅந்தியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: