×

பந்தலூர் அருகே சாலைப்பணியை துரிதப்படுத்த எம்எல்ஏ.,விடம் மக்கள் கோரிக்கை

பந்தலூர், மே 25 :  பந்தலூர் அருகே பொன்னானி அம்மங்காவு சாலைப்பணியை துரிதப்படுத்த கிராம மக்கள் எம்எல்ஏ.,விடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து அம்மங்காவு, பந்தபிலா, அரசு தேயிலைத்தோட்டம் மற்றும்  நெல்லியாளம் சரகம் 4 வரையுள்ள 2.8 கிமீ தூரமுள்ள சாலை கடந்த பல வருடங்களுக்கு முன் சேரங்கோடு ஊராட்சி மூலம் ஜல்லிகற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையை தார்சாலையாக மாற்றித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சி மூலம் 2.8 கிமீ தூரமுள்ள சாலையை தார்சாலை மாற்றுவதற்கு ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சுமார் 400 மீ தூரமுள்ள சாலை அமைபதற்கான நிலம், வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதாக கூறி வனத்துறையினர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் சாலைப்பணி நடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பந்தப்பட்ட சாலையை கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் தார்சாலை பணியை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு எம்எல்ஏ இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags : MLA ,road ,Pandalur ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்