பரத் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி டாக்டர் கவுசல்யா முருகையன் கல்வி அறக்கட்டளையின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனைத்து இடங்களுக்கும் வேன் வசதி. வகுப்புகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ், கேஜி குழந்தைகளுக்கு மாண்டிச்சேரி கல்வி முறை, ஆண், பெண்களுக்கு தனித்தனி விடுதி, விடுதி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, குறைவான கல்வி கட்டணம், யோகா, கராத்தே, ஸ்கேட்டிங், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நவீன ஆய்வகம், தனி விளையாட்டு மைதானம், நூலக வசதி, கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், உறவினர்கள் ஆதரவுடன் படிக்கும் மாணவர்கள், வசதி குறைவான குழந்தைகள், அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பள்ளி பணியாளர் குழந்தைகளுக்கு டாக்டர் கவுசல்யா முருகையன் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. தற்போது, பள்ளியில் கேஜி வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை அட்மிஷன் நடக்கிறது.