பொள்ளாச்சி-வால்பாறை சாலை நா.மூ. சுங்கத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ராமு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி, நாக் தரச்சான்று, ஐ.எஸ்.ஓ தரம் பெற்றது. இலங்கை, பூடான் நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். ஆயிரம் மாணவ, மாணவிகள், 55 பேராசிரியர்கள், 9 இளங்கலை, 3 முதுகலை, 2 ஆய்வியலாளர், 3 முனைவர் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. 90 சதவீதம் மேல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில அறிவை வளர்க்க ஆங்கில ஆய்வகம் உள்ளது.
ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வர பேருந்து வசதி உள்ளது. நவீன இன்டர்நெட் வசதியுடன் 300 கணினி கொண்ட ஆய்வகம் உள்ளது. ஆண்கள், பெண்களுக்கான தங்கும் விடுதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விளையாட்டு துறையிலும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளசேதம் போது பேரணி நடத்தி ஒரு லட்சம் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. பிளஸ்2 பயின்ற மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆர்விஎஸ் பள்ளியில் படித்த மாணவர்கள், தற்போது படித்துகொண்டு இருக்கும் மாணவ, மாணவிகள் உடன் பிறந்தோர் ஆகியோர்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது.