பொள்ளாச்சி, மே 25: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர்ராம ஐயங்கர் நகராட்சி மேல்நிலை பள்ளியில், ஸ்பாட்டன் யுனெடெட் புட்பால் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. இப்போட்டி 27ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை, கோவை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொள்கின்றனர்.