×

மாவட்ட கால்பந்து போட்டி

பொள்ளாச்சி, மே 25: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர்ராம ஐயங்கர் நகராட்சி மேல்நிலை பள்ளியில், ஸ்பாட்டன் யுனெடெட் புட்பால் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. இப்போட்டி 27ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை, கோவை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொள்கின்றனர்.

இதில் நேற்று நடந்த துவக்க ஆட்டத்தில், பொள்ளாச்சி விஆர்எஸ்சி அணியும், உடுமலை ஹைடெக் அணியும் மோதியது. இறுதியில் 2-1 என்ற புள்ளிகனக்கில் விஆர்எஸ் அணி வெற்றிபெற்றது. நாளை மறுநாள் நடக்கும் இறுதி போட்டி நிறைவில், வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுவதாக, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Tags : football match ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து போட்டி செப்.21ம் தேதி கொச்சியில் தொடக்கம்