×

வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணி தீவிரம்

வால்பாறை, மே 25:  வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை மேகங்கள் சூழ்ந்து, சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என்பதால், தற்போது வால்பாறையில் உள்ள பல்லாயிரக்காணக்கான தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. தோட்டங்களில் கவ்வாத்து வெட்டுதல், சால் வெட்டுதல், நிழல் மரங்கள் கிளை கத்தரிப்பு, நீர்வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

குறிப்பாக நிழல்மரம் கத்தரிப்பு பணியும், 3ம் கட்ட கவ்வாத்து பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேயிலை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என்பதால் தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணிகள் தற்போது செய்து வருகிறோம், இதனால் மழைக்காலங்களில் தேயிலை செடிகள் துளிர் விட்டு நன்றாக வளரும்’ என்றார்.

Tags : area ,Valparai ,
× RELATED வாட்டி வதைக்கும்...